புதன், 8 ஏப்ரல், 2015

அவசர கால அழைப்பு எண் 112 டிராய் பரிந்துரை

நாடு முழுவதுக்குமான அவசர கால அழைப்பு எண்ணாக 112 என்ற ஒரே எண்ணை
பயன்படுத்தி கொள்ள தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்
துள்ளது. தற்போது ஒவ்வொரு துறைக்கும் என தனித்தனியாக, 100,101,102,108 என்ற அவசரகால
அழைப்பு எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து 112
எண்களாக பயன்படுத்த முடியும் என டிராய் தெரிவித்துள்ளது. இதன்படி தனித்தனியாக செல்லும்
அனைத்து அழைப்புகளும் 112 என்ற மைய எண்ணிற்கு தகவல் சென்றடையும். அங்கிருந்து எந்த விதமான உதவி தேவைப்படுகிறதோ அந்த துறைக்கு அழைப்பு மாற்றம் செய்யப்படும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக