பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி போளூர் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை தொடங்கியது.
மெட்ரிக். துறையின் இணை இயக்குநர் கார்மேகம் மேற்பார்வையில், மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத், மாவட்ட
கல்வி அலுவலர்கள் வீ.மதியழகன் (திருவண்ணாமலை), டி.ஜோசப்ராஜ்
(செய்யாறு), மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் சசிகலாவதி உள்ளிட்டோர்
இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொன்.அருண்பிரசாத் கூறியதாவது:
7 குழுக்களாகப் பிரித்து குழுவுக்கு தலா 25 பேர் என 175 பேரின் சான்றிதழ்
சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி ஜனவரி 20 முதல் 27
வரை நடைபெறும். இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 413 பேரும்,
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 716 பேரும் என
1,129 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக