அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா சனிக்கிழமை (மே 23) முதல்வராக பதவியேற்கிறார். 5-வது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்கும் அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியலும்:

ஜெயலலிதா - முதல்வர் | காவல், உள்துறை

ஓ.பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணித் துறை

நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

ஆர்.வைத்திலிங்கம் - வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதி

எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்

ப.மோகன் - தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்

ப.வளர்மதி - சமூல நலத்துறை, சத்துணவு.

பி.பழனியப்பன் - உயர் கல்வித்துறை

செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவுத்துறை

ஆர்.காமராஜ் - உணவு, இந்து சமய அறநிலைத்துறை

பி.தங்கமணி - தொழிற்துறை

வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை

எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை

எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை

டி.கே.எம். சின்னையா - கால்நடை பராமரிப்புத் துறை

எஸ்.கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் துணிநூல்

எஸ்.சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை

என்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

கே.எ.ஜெயபால் - மீன்வளத்துறை

முக்கூர் என்.சுப்பிரமணியன் - தகவல் தொழில்நுட்பம்

ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த்துறை

கே.டி.ராஜேந்திர பாலாஜி - செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்

பி.வி.ரமணா - பால்வளத்துறை

கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித்துறை

தோப்பு என்.டி.வெங்கடாசலம் - சுற்றுச்சூழல்துறை

டி.பி.பூனாச்சி - காதி, கிராமத் தொழில்

எஸ்.அப்துல் ரஹிம் - பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்

சி.விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை

ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு.

முன்னதாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழக்கம்போல செயல்படும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்த பட்டியலை விரைவில் அளிக்குமாறும் கோரினார்.

இதையடுத்து, பிற்பகல் 1.28 மணிக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 2.03 மணிக்கு ராஜ்பவன் சென்றார். அவரை பூங்கொத்து கொடுத்து ஆளுநர் வரவேற்றார். அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா அளித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அதில் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.