வியாழன், 21 மே, 2015

தமிழ் மொழிப்பாடத்தில் முதன் முறையாக 586 பேர் 100-க்கு 100

பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழிப்பாடத்தில் முதன் முறையாக 586 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ் மொழிப்பாடத்தில் 586 பேர் 100-க்கு 100 பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மற்ற பாடங்களில் 100-க்கு 100

கணிதம் - 27,134 பேர்

அறிவியல் - 1,15,853 பேர்

சமூக அறிவியல் - 51,629 பேர்

ஆங்கிலம் - 644 பேர்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக