திங்கள், 25 மே, 2015

TRB PG TAMIL சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் -தூது




தூது
நொடிப்பொழுது யுகமாவதும் யுகம் கூட கண நேரமாவதும் காதலில் விளைந்திடும் அதிசயம். பிரிவும் சேரலும் செய்யும் ரசவாதம்.
பிரிந்திருக்கும் காதலர்கள் தங்கள் எண்ணங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் பகர்ந்து சொல்லவும் ஏதாவது ஒரு வகையில் தூது நடைபெறும். தூது அனுப்புதல் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
காப்பியங்களில் கதைத் தலைவனோ தலைவியோ கிளியையோ அன்னத்தையோ தூதாக அனுப்பியதை படித்திருப்போம். அது காப்பியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஆனால் தூது பற்றி மட்டும் எழுதினால் அது தூது எனும் சிற்றிலக்கியமாகிடும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் குணமாலை கிளியை தூது அனுப்புகிறாள். நளவெண்பாவில் நளன் அன்னத்தைத் தூது அனுப்புகிறான்.
தூது இலக்கியம் என்பது காதல் கொண்ட தலைவனோ, தலைவியோ தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு உயர்திணைப் பொருட்களையோ, அஃறிணைப் பொருட்களையோ தூதுப் பொருளாக கொண்டு பாடப்படுவதாகும்.
அப்படியானால் அவை என்னென்ன?
இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை பயில்பெறு மேகம், பூவை, பாங்கி
நயந்த குயில் பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம்
ஈரைந்து மே தூது ரைத்து வாங்கும் தொடை.
- (பிரபந்தத் திரட்டு)
என்று கூறப்பட்டுள்ளது.
இதில் பிரமரம் என்பது வண்டு. பாடலில் கூறப்பட்டுள்ள பத்து இனங்கள் தவிர நாரை, காக்கை, கழுகு, பணம், துகில், ஜவ்வாது, நெல், விறலி, தமிழ், புகையிலை, கழுதை போன்றவையும் தூதுப் பொருளாக பாடப்பட்டுள்ளன. பாடல்வகை கலிவெண்பாவில்தான் அமைந்திடும். நூலின் பெயர் தூதுப் பொருளின் பெயரால் விளங்கிடும். காதலில் மட்டும் தான் தூது இடம் பெறும் என்றில்லை. பிற துறைகளிலும் தூது இடம் பெறும். 
தூது நூல்கள் அகத்தூது, புறத்தூது என இரு வகையில் அமையும். அகநானூறு 170ம் பாடலில் தலைவி நண்டைத் தூது அனுப்புகிறாள். நற்றிணை 54, 70ம் பாடல்களில் வெள்ளாங்குருகும் 102ம் பாடலில் கிளியும் தூது அனுப்பப்படுகிறது. மகாபாரதத்தில் கண்ணன் தூதும், கந்தபுராணத்தில் வீரபாகுத்தேவர் தூதும் புறத்தூதாக நிகழ்கிறது. தமிழ் விடுதூதும், அகத்தூதாகவே அமைகிறது. அதன் சிறப்பான வரிகளாக பலராலும் மேற்கோள் காட்டப்படும் வரிகள், இருந்தமிழே உன்னால் இருந்தேன்.
இமையோர், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (151) என்பதாகும். இது தமிழின் சிறப்பை உணர்த்தும் தலைவியின் வார்த்தைகளாய் வருகின்றன.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் நெஞ்சுவிடுதூது எனும் நூலை எழுதியுள்ளார். பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் கிள்ளை விடுதூது, கச்சியப்ப முனிவர் வண்டு விடு தூது , சுப்ர தீபக் கவிராயர் கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது, சரவணப் பெருமாள் கவிராயர் சேதுபதி விறலி விடு தூது ஆகியவற்றை எழுதியுள்ளனர். விறலி விடுதூது நூல்கள் காமரசம் கொண்டவையாகும். 
"தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி" எனும் திரைப்பாடல் அவ்வப்போது நம் காதுகளில் விழுந்திருக்கும். காலம் மாறுகிறது தூதும் மாறுகிறது. இன்னும் ஒரு தலைவி, "கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ" என்று ரயிலைத் தூது அனுப்புகிறாள். எனவே ஏதாவது ஒரு வடிவில் தூது தொடரவே செய்கிறது.


 

நொடிப்பொழுது யுகமாவதும் யுகம் கூட கண நேரமாவதும் காதலில் விளைந்திடும் அதிசயம். பிரிவும் சேரலும் செய்யும் ரசவாதம்.

 

பிரிந்திருக்கும் காதலர்கள் தங்கள் எண்ணங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் பகர்ந்து சொல்லவும் ஏதாவது ஒரு வகையில் தூது நடைபெறும். தூது அனுப்புதல் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 

காப்பியங்களில் கதைத் தலைவனோ தலைவியோ கிளியையோ அன்னத்தையோ தூதாக அனுப்பியதை படித்திருப்போம். அது காப்பியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். ஆனால் தூது பற்றி மட்டும் எழுதினால் அது தூது எனும் சிற்றிலக்கியமாகிடும்.

 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் குணமாலை கிளியை தூது அனுப்புகிறாள். நளவெண்பாவில் நளன் அன்னத்தைத் தூது அனுப்புகிறான்.

 

தூது இலக்கியம் என்பது காதல் கொண்ட தலைவனோ, தலைவியோ தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு உயர்திணைப் பொருட்களையோ, அஃறிணைப் பொருட்களையோ தூதுப் பொருளாக கொண்டு பாடப்படுவதாகும்.

 

அப்படியானால் அவை என்னென்ன?

 

இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை பயில்பெறு மேகம், பூவை, பாங்கி

நயந்த குயில் பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம்

ஈரைந்து மே தூது ரைத்து வாங்கும் தொடை.

 

- (பிரபந்தத் திரட்டு)

 

என்று கூறப்பட்டுள்ளது.

 

இதில் பிரமரம் என்பது வண்டு. பாடலில் கூறப்பட்டுள்ள பத்து இனங்கள் தவிர நாரை, காக்கை, கழுகு, பணம், துகில், ஜவ்வாது, நெல், விறலி, தமிழ், புகையிலை, கழுதை போன்றவையும் தூதுப் பொருளாக பாடப்பட்டுள்ளன. பாடல்வகை கலிவெண்பாவில்தான் அமைந்திடும். நூலின் பெயர் தூதுப் பொருளின் பெயரால் விளங்கிடும். காதலில் மட்டும் தான் தூது இடம் பெறும் என்றில்லை. பிற துறைகளிலும் தூது இடம் பெறும். 

 

தூது நூல்கள் அகத்தூது, புறத்தூது என இரு வகையில் அமையும். அகநானூறு 170ம் பாடலில் தலைவி நண்டைத் தூது அனுப்புகிறாள். நற்றிணை 54, 70ம் பாடல்களில் வெள்ளாங்குருகும் 102ம் பாடலில் கிளியும் தூது அனுப்பப்படுகிறது. மகாபாரதத்தில் கண்ணன் தூதும், கந்தபுராணத்தில் வீரபாகுத்தேவர் தூதும் புறத்தூதாக நிகழ்கிறது. தமிழ் விடுதூதும், அகத்தூதாகவே அமைகிறது. அதன் சிறப்பான வரிகளாக பலராலும் மேற்கோள் காட்டப்படும் வரிகள், இருந்தமிழே உன்னால் இருந்தேன்.

 

இமையோர், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (151) என்பதாகும். இது தமிழின் சிறப்பை உணர்த்தும் தலைவியின் வார்த்தைகளாய் வருகின்றன.

 

கி.பி.14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் நெஞ்சுவிடுதூது எனும் நூலை எழுதியுள்ளார். பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் கிள்ளை விடுதூது, கச்சியப்ப முனிவர் வண்டு விடு தூது , சுப்ர தீபக் கவிராயர் கூளப்ப நாயக்கன் விறலி விடுதூது, சரவணப் பெருமாள் கவிராயர் சேதுபதி விறலி விடு தூது ஆகியவற்றை எழுதியுள்ளனர். விறலி விடுதூது நூல்கள் காமரசம் கொண்டவையாகும். 

 

"தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி" எனும் திரைப்பாடல் அவ்வப்போது நம் காதுகளில் விழுந்திருக்கும். காலம் மாறுகிறது தூதும் மாறுகிறது. இன்னும் ஒரு தலைவி, "கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ" என்று ரயிலைத் தூது அனுப்புகிறாள். எனவே ஏதாவது ஒரு வடிவில் தூது தொடரவே செய்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக