புதன், 4 செப்டம்பர், 2013

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: 6 பேருக்கு ஜாமீன்

  டி.இ.டி., வினாத்தாள் மோசடி வழக்கில்
கைதான ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை சேர்ந்த அசோக்குமார்,
கொடுத்த புகாரின் பேரில் டி.இ.டி. தேர்வில்
வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட
கிருஷ்ணகிரியை சேர்ந்த டாஸ்மாக் கண்காணிப்பாளர் 
கணேசன், 39, அவரது மனைவி எஸ்டர்தேகிருபை, 34,
ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த
கிருஷ்ணப்பா,42, ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த
(சாக்ஷி நாளிதழ் நிருபர்) சந்திரசேகர்,33,
பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த
டாஸ்மாக் விற்பனையாளர் அசோகன்,37, பாப்பிரெட்டிப்பட்டியை 
அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தஇளையராஜா, 30 ஆகிய
ஆறு பேரை தனிப்படை போலீஸார் கடந்த, 17ம்
தேதி கைது செய்தனர். இவர்கள் ஜாமீன்
கோரி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். நீதிபதி தாரணி முன்னிலையில் 
நேற்று மனு விசாரணைக்கு வந்தது. கணேசன் உள்ளிட்ட
ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை, ஆறு பேரும்
தர்மபுரி குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் தினம்
கையெழுத்து இடவும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக