செவ்வாய், 24 செப்டம்பர், 2013

 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன. 

இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில்தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது. விசாரணையில் வினாக்களில் பிழை இருப்பதை வாரிய தலைவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் தமிழ்மறு தேர்வு நடத்தமுடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வாரிய தலைவர் அரசிடம்ஆலோசனை பெற்றே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.ப விசாரணையும் செப். 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இன்று மறுதேர்வு நடத்தவிளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
  
 இந்த வழக்கு இன்று    
பிற்பகல்161   வதுவழக்காக  விசாரணைக்கு வருகின்றது . மாலைக்குள்  தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும். முதுகலை ஆசிரியர்  நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து  பட்டதாரிகளும் நீதிமன்றத்தின்  உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் .
  



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக