வியாழன், 19 செப்டம்பர், 2013

PG TRB. பாடங்களின் தேர்வு   முடிவுகள்   விரைவில்   வெளியிடப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது

 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற
பாடங்களின் தேர்வு   முடிவுகள்   விரைவில்   வெளியிடப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்
தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம்
பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில்
அச்சுப் பிழைகள் இருந்தன. 
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்
அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில்தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது. வழக்கு விசாரணையும் செப். 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய மறுதேர்வு நடத்தவிளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.  24ம் தேதி வழக்கு விசாரணைக்குப் பிறகே தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்

 மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 2,881 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களில் 605 பேர் மட்டும் தமிழ்ப் பாட ஆசிரியர்கள்.முதுநிலை தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, மீதமுள்ள பாடங்களுக்கான  தேர்வு முடிவுகள்   விரைவில் வெளியிடப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது  
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக