புதன், 25 செப்டம்பர், 2013

TRB PG TAMIL NEWS UPDATE :மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை  உத்தரவிட்டது



                                            முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமன தேர்வில்அச்சுப்பிழையுள்ள  கேள்விகள்இடம்பெற்றதால், மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) பரிந்துரை.
 மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாள்களில் சரியானவிடையை தேர்ந்தெடுத்து எழுத 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண்வழங்க வேண்டும். . இதுபோல்,திருச்சி அந்தோணி கிளாரா மற்றொரு மனு செய்தார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன் இன்று(செப்., 25 )மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அச்சுப்பிழையுள்ள கேள்விகள்இடம்பெற்றதால், மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25)  பரிந்துரை.செய்து உத்தரவிட்டது  மீண்டும்  வழக்கு விசாரணை செப் 30 அன்று நடைபெற  உள்ளது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக