வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுகிறது முதல்வர் , 110 விதியின் கீழ் சட்டசபையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்

சென்னை : அரசு ஊழியர்கள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் சட்டசபையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பேசியதாவது, குழு காப்பீட்டு தொகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது. கருணைமுறையில், பணிவரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு, சம்பள உயர்வு, குடும்ப நல நிதி திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ. 60 பிடித்தம் செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக