சனி, 30 நவம்பர், 2013

1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை (01.12.2013) குரூப் - 2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது

தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப் - 2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன.

2,269
மையங்கள் : இது குறித்த அறிவிப்பு, செப்., 4ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. கடைசி தேதி முடிந்த பின், விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின், 6.65 லட்சம் பேரின் விண்ணப்பங்கள், தகுதியானவையாக ஏற்கப்பட்டன. நாளை காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, மாநிலம் முழுவதும், 2,269 மையங்களில், தேர்வு நடக்கிறது. அனைத்து மையங்களிலும், தேர்வுப் பணியை, வீடியோ பதிவு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பறக்கும் படைகள் : தேர்வுக்கான அனைத்துப் பணிகளும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 226 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள், முதுநிலை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து, தேர்வை கண்காணிப்பர்.

79,550
பேர் : பறக்கும் படையில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். 392, வாகன பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர், தேர்வு மையம் வாரியாகச் சென்று, தேர்வை கண்காணிப்பர். சென்னையில் மட்டும், 263 மையங்களில் நடக்கும் தேர்வில், 79,550 பேர் பங்கேற்கின்றனர். அப்ஜக்டிவ் முறையில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பின், நடக்கும் முதல் குரூப் - 2 தேர்வு இது தான். குரூப் - 1 தேர்வுக்கு அடுத்து, மிகவும் முக்கிய தேர்வாக, குரூப் - 2 உள்ளது. இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்தார்.
ஜெனரல் ஸ்டடிஸ் : பகுதியில், 75 கேள்விகள்; திறன் அறிதல் பகுதியில், 25 கேள்விகள்; பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து, 100 கேள்விகள் என, மொத்தம், 200 கேள்விகள் இடம்பெறும்.ஒவ்வொரு கேள்விக்கும், தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது.
முக்கிய காலி பணியிடங்கள்
வருவாய் துறையில் உதவியாளர் - 360கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் - 165கைத்தறி துறை ஆய்வாளர் - 147பால்வள துறை, முதுநிலை ஆய்வாளர் - 137துணை வணிகவரி அலுவலர் - 66தொழிலாளர் நல ஆய்வாளர் - 9உள்ளாட்சி தணிக்கை ஆய்வாளர் - 7இந்து அறநிலைய துறை, தணிக்கை ஆய்வாளர் - 39

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக