வியாழன், 21 நவம்பர், 2013

NEWS IN DETAIL: முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 28.11.2013 க்கு ஒத்திவைப்பு

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டதுஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள்  எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து  வழக்கினை ஒத்திவைத்தது

அவ் வழக்கு .நாளை ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன்   ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.அன்று நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன்    அடங்கிய  அமர்வுக்கு விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இதற்கிடையில் அவ்வழக்கு  இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று( 21.11.2013) விசாரணைக்கு வந்தது.
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் A C D வகை வினாத்தாள்களக்கொண்டு தேர்வெழுதியவர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி  மறுதேர்வு நடத்துவதால் தேர்வெழுதியவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் தேர்வெழுதிய அனைத்து பிரிவினருக்கும் பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்ற TRB யின் யோசனக்கு பதிலாக  B வினாத்தாளில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்து அதனை 150 மதிப்பெண்களுக்கு மாற்றி  தேர்வுமுடிவுகளை வெளியிடலாம் என தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் இன்று அஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
 இந் நிலையில் அடுத்த விசாரணையின்போதுதான் அரசின் நிலைப்பாடும் பிற எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக