சனி, 24 மே, 2014

திருப்பூர்மாவட்டத்தில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி,மாநகராட்சி பள்ளிகள் அடிப்படையில், 12 மாணவ, மாணவியர்,முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூர்மாவட்டத்தில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி,மாநகராட்சி பள்ளிகள் அடிப்படையில், 12 மாணவ, மாணவியர்,முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூர்மாவட்டத்தில் 2013-14ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு,அரசு உதவி பெறும், மெட்ரிக், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 27,396 பேர்எதிர்கொண்டனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 25,855 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில், அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி பள்ளி அடிப்படையில், சிறந்த மதிப்பெண் பெற்று, 12மாணவர்கள், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
அரசுப்பள்ளி அளவில், 495 மதிப்பெண்களுடன் அய்யங்காளிபாளையம் அரசுப்பள்ளி மாணவன் தீனதயாளன் முதலிடம்; 494 மதிப்பெண்களுடன்மொரட்டுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவன் பாலாஜி இரண்டாமிடம்; 493 மதிப்பெண்களுடன் திருப்பூர்கே.எஸ்.சி., பள்ளி மாணவன் விஜய ஆனந்த், கணக்கம் பாளையம் பள்ளி கோமதி, பிச்சம்பாளையம் பள்ளி பாலசுப்பு லட்சுமி ஆகியோர், அரசு பள்ளி அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

மாநகராட்சி அளவில், 496 மதிப்பெண்களுடன் பழனியம்மாள் பெண்கள் மேல்
நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி முதலிடம்; 493 மதிப்பெண்களுடன் அதே பள்ளி மாணவி ஆயிஷா நிகார்இரண்டாமிடம்; 491 மதிப்பெண்களுடன் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி மாணவி ஐஸ்வர்யா மூன்றாமிடம்.

அரசு உதவி பெறும் பள்ளி அளவில், 495 மதிப்பெண்களுடன், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பெண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவி கவித்ரா முதலிடம்; 494 மதிப்பெண்களுடன் புங்கமுத்தூர் காந்தி கே.என்.,மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யா இரண்டா மிடம்; 493 மதிப்பெண்களுடன், அவிநாசி செயின்ட் தாமஸ் பெண்கள் பள்ளி திவ்யா, தாராபுரம் அலோசியஸ் பெண்கள் பள்ளி யாழினி ஆகியோர் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக