திங்கள், 19 மே, 2014

மே 27ம் தேதி வரையில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்

மே 27ம் தேதி வரையில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்
என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ந்தேதி கடைசி நாள் என்று அண்ணா பல்கலைக்கழம் அறிவித்திருந்தது. கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. நாளை கடைசி நாள் என்ற நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பல்கலைக்கழகம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. மே 27ம் தேதி வரையில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக