ஞாயிறு, 25 மே, 2014

ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களிடம் ஆர்வம் இல்லை, 4,000 விண்ணப்பம் விற்பனை.

இரண்டாண்டு ஆசிரியர்பயிற்சி டிப்ளமா படிப்பிற்கு, கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20ஆயிரம் இடங்கள் உள்ளபோதும், வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக, ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளது. இதனால்,
மாணவர்களிடம் ஆர்வம் இல்லை. நேற்று மாலை வரை, மாநிலம் முழுவதும், 4,000 விண்ணப்பம் விற்பனையானதாக,துறை வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான, ஜூன், 2ம் தேதி வரை, மேலும், 500 விண்ணப்பம் விற்பனை ஆகலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 2,000க்கும் அதிகமாக பெறப்பட்டுள்ளதாகவும், துறை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் இறுதியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக