புதன், 21 மே, 2014

இன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் ( 21.05.14) புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட கல்வித் துறையால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு அனைத்து சான்றிதழ்களையும் மிக கவனமாக சரிபார்க்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் பிழை இருப்பின் அந்த பிழையுள்ள சான்றிதழை உடனடியாக ஒப்படைத்து திங்கள்கிழமை மாலைக்குள் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.அப்படி பிழை உள்ள சான்றிதழ்கள் மாவட்ட கல்வித் துறையால் பெறப்படும் நிலையில் மறுநாளே புதிய சான்றிதழ் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்களிடம் சான்றிதழ் விநியோகம் செய்யும்போது எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது -அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக