வியாழன், 22 மே, 2014

நாளை (23.05.14) காலை, 10:00 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத்
துறைவெளியிடுகிறது. 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.தமிழகம், புதுச்சேரியில், கடந்த மார்ச், 26 முதல், ஏப்ரல், 9 வரை, 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. மொத்தம், 11,552 பள்ளிகளில் இருந்து, 10.38 லட்சம் மாணவ,மாணவியர், தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும், 66 மையங்களில், விடைத்தாள் திருத்தப்பட்டு, முடிவுகள் தயாரிக்கப்பட்டன. நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறையின்,நான்கு இணையதளங்களில், தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ, மாணவியர்,ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மாணவர்கள், மதிப்பெண்களுடன் கூடிய முடிவை அறிய, பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவேண்டும்.
தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in;
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in;
www.dge3.tn.nic.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக