சனி, 23 ஆகஸ்ட், 2014

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இடங்கள் காலியாக உள்ளன.

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் நான்காவது நாளானவெள்ளிக்கிழமை முடிவில் 685 இடங்களுக்கு மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டனர். 4682 இடங்கள் காலியாக உள்ளன.
பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட எட்டு படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 19-ஆம் முதல்நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் கலந்தாய்வான வெள்ளிக்கிழமை முடிவில் மொத்தம் 685இடங்கள் நிரம்பியுள்ளன. பி.எஸ்சி. நர்சிங் (ஆண்கள்) படிப்பில் பழங்குடியின்பிரிவினருக்கான ஒரே ஒரு அரசு இடம் மட்டும் காலியாக உள்ளது.இதுதவிர, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4681 காலியாக உள்ளன. காலை 9 மணி, 11 மணி, பிற்பகல் 2 மணி என மூன்று கட்டமாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 27-ஆம்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு நாளும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள்www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் இரண்டாம் கட்டக்கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக