ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்
ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டதுபோல, இங்கும் தொடங்கப்பட்டகலந்தாய்வில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு முன்னிலையில் நடைபெற்றஇந்தக் கலந்தாய்வில் 47 பேர் கலந்து கொண்டனர். ஆங்கிலம், கணிதம்,இயற்பியல், வேதியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல்,தாவரவியல், விலங்கியல், உயிரியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல் ஆகியபாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.

பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 49 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இணையவழி மூலம் தகவல் வந்தது. இதில், இணையவழி மூலம் பணியிடத்தைத் தேர்வு செய்த 34 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக