ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.

PG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும்நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 14,700 பேர்தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கு இணையதளம் மூலம்கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தில்வசிப்பவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் 118 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில்
வேதியியல்ஆசிரியருக்கு 20 பேரும்,
உயிர் வேதியியல் ஒருவர்,
தாவரவியல் 15 பேர்
,நுண்ணுயிரியல் ஒருவர்,
இயற்பியல் 14 பேர்,
கணிதம் 15 பேர்,
ஆங்கிலம் 9பேர்,
உடல்கல்வி இயக்குநர் நிலை 1,
வணிகவியல் 7 பேர்,
பொருளியியல் 14 பேர்,
வரலாறு 11 பேர்
எனமொத்தம் 108 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று அழைக்கப்பட்ட 10 பேர்
வேறு மாவட்டத்துக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக