ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை

வேலூரில் நடைபெற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 100ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700பேருக்கான ஆசிரியர் பணி நியமனத்துக்கான கவுன்சிலிங்சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த கவுன்சிலிங் வேலூர்,சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 106 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில்100 பேர் பங்கேற்றனர்.
.
மீதமுள்ள 6 இடங்களுக்கு 4 பேர் வரவில்லை. பயோ-கெமிஸ்ட்ரி பணியிடங்களுக்காக இருவருக்கு நாளை கவுன்சிலிங் நடைபெறுகிறது என மாவட்ட கல்வித் துறை தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக