ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான
கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பேகம்பூர் புனித
லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு திண்டுக்கல்மாவட்டத்திலிருந்து 99 பேர் தேர்வு பெற்றுள்ளனர். பாட வாரியாகதேர்வானவர்கள் விவரம்:
தாவரவியல் 6, வேதியியல் 6, வணிகவியல் 14,
பொருளியில் 12, ஆங்கிலம் 21, புவியியல் 3, வரலாறு 7, கணிதம் 12,
இயற்பியல் 10, நுண்ணுயிரியல் 1, விலங்கியல் 7.

இதில் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் 8 காலிப் பணியிடங்கள் இருந்தன.
வணிகவியல் 1, பொருளியில் 1, வேதியியல் 1, கணிதம் 2, வரலாறு 1,
புவியியல் 1, மனையியல் 1.

இதில் மனையியல் தவிர மற்றஅனைத்து பணியிடங்களும் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மூலம்நிரப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக