செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தொடர் மதிப்பீட்டு முறை : 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கையேடுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்புக்கும் தொடர்மதிப்பீட்டு முறை விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பானபயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, நிகழாண்டில் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சியின்போது விநியோகிப்பதற்காக சுமார் 20 ஆயிரம் கையேடுகள் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் அச்சிடப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக